வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 5

ஹஜ் பயணம்உமர் அல் ஃபுத்தைமில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சக பாக்கிஸ்தானியர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானியர் கார் மூலமாகவோ பஸ் மூலமாகவோ ஹஜ்ஜுக்குப் போய் வருவதை அறிந்திருந்தார். இவருடன் பணி புரிந்த நண்பர்கள் உமர் ஹஜ் செய்வதை ஆர்வப்படுத்தினர். துபாயிலிருந்து கார், பஸ், விமானம் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்வது எளிது. அந்தக்கடமையை செய்துவிடுமாறு அடிக்கடி கூறுவர்.உமர் என்னை ஹஜ் செய்துவரும்படி வற்புறுத்தினார். பொருள் ஈட்ட வந்த இடத்தில் ஹஜ் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஊட்டியவர் உமர்தான்....

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 4

உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கியவர் ஒரு சிந்தி; பகுதி 3-ல் சொல்லப்பட்டவர்தான். பாடியா பிரிவைச் சேர்ந்தவர். துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும் குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபையிலும் கராமாவிலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 3

சிறு வயதில் உமர்தம்பி நோயால் நோவினை அடைந்தார். அவர் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ‘டெட்டனஸ்’ என்ற வாய்ப்பூட்டு நோய் ஏற்பட்டது. இதில் பிழைப்பவர்கள் சிலரே! சிறுவர்கள் உள்ளங் காலில் புண் ஏற்பட்டால் அதைக் கவனிக்காமல், மாடு, குதிரை இவற்றின் சாணம் போன்றவற்றை மிதித்து நடந்தால் ஏற்படும் நோய். உடல் விறைத்துவிடும்; வாய் திறக்க முடியாது; சிறு ஒலியைக் கேட்டால் கூட தாங்கிக்கொள்ள முடியாது! இந்த நோயால் பாதிக்கப்பட்டு 16 நாட்கள் தஞ்சை மிராசுதார் மருத்துவ மனையில் மருத்துவம் பார்க்கப்பட்டது. விலை உயர்ந்த...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 2

இதற்கிடையில், உமருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது! இயற்கையிலேயே உமருக்கு இயற்பியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். நம் கல்லூரியில் இளங்கலையில் இயற்பியல் பாடம் இல்லை. வேறு வழியின்றி உயிரியல் (Zoology) பாடத்தை எடுத்துப் படித்தார்!பறவைகள், மிருகங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அலாதியான ஆர்வம்! உலகிலேயே பறவை ஆராய்ச்சியில் மிகப் பிரபலம் அடைந்திருந்த சலீம் அலி பற்றி என்னிடம் நிறையச் சொல்வார்! இவ்வளவு ஆர்வம் இருந்தும், நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்வு பெறவேண்டும்...

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 1

உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி கிளே, தனக்கு வயது எட்டு மாதம் ஆனபோதே நடக்கத் துவங்கி விட்டாராம்! நம் உமர் தம்பியும் தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடந்துவிட்டார்!ஏன் இந்த ஒப்பீடு? செயற்கரிய செயல்களைப் பிற்காலத்தில் செய்ய இருப்பவர்களின் தொடக்க வாழ்வு, பெரும்பாலும் இப்படித்தான் இருந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான். இரண்டு, மூன்று வயதில் தன் மழலை வாயால் திருக்குறள்களை ஒப்புவிப்பார்! அந்த வயதிலேயே டார்ச் விளக்கு மூடியைத் திறந்து, பேட்டரி செல்களை எடுத்துக் கையில்...

powered by Blogger