
5:46 AM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
0 Comments
இன்று உழைப்புக்கும் உழைப்பாளிகளுக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அன்றாட வேலைகளை முடிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. அது எந்த வேலையாக இருந்தாலும் சரி. அதற்கான காரணங்களை ஆராய்வோம்.இன்று இந்தியாவில் கல்வி கட்டாயக் கடமை ஆகிவிட்டது. கல்வியின் அவசியம் பல ஆண்டுகளுக்கு முன்பே உணரப்பட்டுவிட்டது. அரசு, குறிப்பாகத் தமிழ்நாடு அரசு கல்வியில்தான் அக்கறை செலுத்தியது. கர்ம வீரர் காமராஜ் காலத்தில் இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. இலவசப் பகல் உணவும் வழங்கப்பட்டது.எல்லா இனத்தவரும் கல்வி கற்கத் துவங்கினார்கள். கட்டிடத் தொழிலாளர் முதலாக எல்லாத் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளும்...

1:48 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
0 Comments
கல்வி வாணிபப் பொருளாகிவிட்டது. எந்த அளவுக்கு அரசு கல்வியை இலவசப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு நேர் மாறாக தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை விலை உயர்ந்த வாணிபப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.தனியார் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. ஐந்தாவது வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. போதாதற்கு இந்தி வேறு கற்றுத் தருகிறார்களாம். எல்லாம் பணம் பண்ணத்தான். இவற்றில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் வரிசையில் நிற்கின்றனர். பாவம், இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது ஆசிரியைகளே தமிழ்வழி கல்வி கற்றவர்கள் என்று.நகரங்களில் பெற்றோர் படித்தோராக...

4:51 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
1 Comment
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ“இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.” என்ற தலைப்பில் திரு த.அரவிந்தன் தினமணி (20-05-2011) நாளிதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அக்கட்டுரையின் செய்தி சிதறா வண்ணம் சுருக்கிக் கீழே தரப்பட்டிருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி வேட்பாளர் திரு க.பீம்ராவ்தான் அந்த எம்.எல்.ஏ. மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொதுத் தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். “எம்.எல்.ஏ. என்பது பதவி அல்ல; பொறுப்பு” என்கிறார்.க.பீம்ராவ் மிக எளிமையானவர்....

12:13 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
0 Comments
விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும்இரண்டு மாத விடுமுறையை மாணவர்கள் நன்றாகவே அனுபவித்தார்கள். அதன் பலனையும் பெற்றோர் நன்கு அனுபவித்துவிட்டனர். தேர்வுகள் நடக்கும்போது விடுமுறை வராதா என்று மாணவர்கள் எண்ணுவதும், விடுமுறை வந்தபின் பள்ளி திறக்கமாட்டர்களா என்று பெற்றோர் ஏங்குவதும் ஒரு வேடிக்கையான வாடிக்கை! பெற்றோரின் ஏக்கத்தில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது சமச்சீர் கல்விப் பிரச்சினை. வந்தது அறிவிப்பு: பள்ளி திறப்பு, தள்ளி வைப்பு! இந்த இரண்டு மாத விடுமுறைக் காலத்திற்குள் எத்தனை நிகழ்வுகள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தின!தேர்தல்...

7:56 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
1 Comment
அகமும் புறமும்சங்க காலத்தில் அகத்தையும் (அன்பு, ஈகை) புறத்தையும் (வீரம்) பெருமைப் படுத்துவதற்காக அகநானூறு, புறநானூறு என்ற இலக்கியங்கள் உருவாகின. இலக்கியத்துக்கும் பெருமை சேர்ந்தது. ஆனால் இன்று அகமும் புறமும் நம்மைச் சிறுமைப் படுத்திக் கொண்டிருக்கின்றன.அகம் :அகம் என்ற சொல்லுக்கு உள், மனம் என்று பொருள். அகத்திற்கு கர்வம் என்ற பொருளும் உண்டு. தன்னைப் பற்றிய செய்திகளைப் பெருமையாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இழிவாக நினைப்பது. மனத்தினுள்ளே இதைத் தேக்கி வைத்திருப்பதால் அகம் என்று பெயர் வந்திருக்கலாம். இது பாவம் என்பதால் அகம்பாவம்பெரும்பாலும் பதவியில்...

9:51 AM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
1 Comment

உயர் வகுப்பாரும் வசதி படைத்தவர்களும் படிக்கவேண்டும் என்பதற் காக கொண்டு வரப்பட்ட கல்வித் திட்டம்தான் மெட்ரிகுலேஷன், C.B.S.E. இதில் பெற்றோர் பிள்ளைகளைச் சேர்ப்பதன் முக்கிய நோக்கம் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக. அப்படிப் பேசுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. அப்படிப்பட்ட பயிற்சி தரப்படும் அறிகுறியுமில்லை. நம்முடைய ஆங்கிலப் பள்ளிகளில் L.K.G., U.K.G. நடத்தும் ஆசிரியைகள், வேறு வேலை கிடைக்கும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை இந்த வேலையில் இருக்கலாம் என்ற அடிப்படையில் தான் பணி புரிகிறார்கள்....

5:10 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
0 Comments

கல்வி, புத்தகம் இலவசம்;உணவு, சீருடை இலவசம்;லேப்டாப், சைக்கிள் இலவசம்;கல்வியின் உயிர் யார் வசம்?விவசாய மின்சாரம் இலவசம்;சமையல் எரிவாயு இலவசம்;தொலைக் காட்சியும் இலவசம்;2-ஜி மெகா ஊழல் யார் வசம்?அரிசி இருபது கிலோ இலவசம்;ஆடுகள், மாடுகள் இலவசம்;மிக்சி, கிரைண்டர் இலவசம்;சொத்துக் குவிப்பு யார் வசம்?வேட்டி, சேலை இலவசம்;திருமண உதவி இலவசம்;தங்கத் தாலி இலவசம்;குடும்ப அரசியல் யார் வசம்?உமர்தம்பிஅண்...

6:45 AM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
3 Comments
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இருவா.. வின் ஓவியம்அதிரை வாசி,அதிகம் வாசி!அறிவை நேசி!ஆழ்ந்து யோசி!அளந்து பேசி,அடக்கம் நேசி!அறிவாய் உனக்குத்துன்பம் தூசி!உமர்தம்பிஅண்...